விழித்துக் கொள்
விழித்துக் கொள்
- த.சீனு (கவிதை எழுத்தாள்ளார் )
நானே என்னை மறந்தேன்
இது தனிநபருக்கானா உலகம் -நீ
நன்றும் பயனில்லை -உன்
உழைப்பிற்கும் ஏற்ற ஊதியமில்லை
மனம் இருக்கியது
மகிழ்ச்சியும் சுருங்கியது
வெறுமைக்கான உலகமானது
வேற்று கிரகவாசியைப் போல்
தனியாக தென்படுகிறேன்
இங்கு பலருக்கும்
நான் எதிரும் புதிருமாய்
அவர்களின் தேவைக்கான விசுவாசிகள்
நீங்கள் மட்டுமே, ஆனால்
அவர்களின் விசுவாசம்
நிரந்தரமில்லை தேவைக்கு மட்டுமே,
சிறைக்குள் இருக்கும் பறவைகள் நாங்கள்
எங்கள் சூழ்நிலை கட்டிப்போட்டுள்ளது
விடியலைத்தேடி ஒவ்வொரு நாளும்
எங்கள் இறக்குகள் உதிர்வது
இவர்களுக்கு பெரியதாக தெரிவதில்லை
இருண்ட காலமும் உருவாக்கிறது
எவரும் கவனிக்க நேரமில்லை
தான் உயரும் போதும்
தன்னுடன் இருப்பவரை கண்டு கொள்ளதா
உலகம் இது
பதியது ஒரு பாதையை நீ தேடு
உன்னை அவனே தேடுவன்
ஒரு நாள்
கருத்துகள்
கருத்துரையிடுக